பெண்களே!. தலைமுடியை விரித்து போடுவதால் வீட்டில் என்ன கஷ்டம் வரும் தெரியுமா?

free hair

பெண்கள் மகாலட்சுமியின் அம்சம். பார்த்தாலே லட்சுமி கடாட்சமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ வைத்து பார்ப்பதன் அழகே தனி. ஆனால் இன்றைய சூழலில் பலரும் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டுதான் அலைகின்றனர். தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும் தன் குலத்தை முன்னிறுத்துபவளே உயர்ந்தவள் ஆவாள். ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல. வாழ்வின் தத்துவம்.


இந்த நவநாகரீக உலகத்தில் லூஸ் ஹேர் என்று சொல்லப்படும் தலைவிரி கோலமானது பெண்களுக்கு நாகரீகம் ஆகிவிட்டது. நம் முன்னோர்கள் இதை அமங்கலமாக கூறுவார்கள். இதனால் பெண்கள் முடிந்தவரை தங்களது தலை முடியை வாரி கட்டிக்கொள்வது நல்லது. தலைமுடியை வீட்டினுள் காற்றில் அலைய விடக்கூடாது. அது மிகப்பெரிய கஷ்டத்தை நம் வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்து விடும்.

வீட்டிற்குள் முடி உதிரக்கூடாது. இப்படிப்பட்ட நல்ல பழக்கங்களை நம் வீட்டில் இருக்கும் இளைய தலைமுறை பெண்களுக்கும் சொல்லிக்கொடுப்பது நம்முடைய கடமையாகும். தலைவிரி கோலத்தை தவிர்ப்போம். இது உறவின் மீதான பிடிப்பை அறுக்கக்கூடியது. பின்னல் இதன் அமைப்பு திரிவேணி சங்கமத்தை ஒத்தது. 3 நதிகள் சேரும் போது இரண்டு நதிகள் கண்களுக்கு புலப்படும். ஒரு நதி கண்களுக்கு புலப்படுவதில்லை. இதுபோலவே பின்னலின் 3 பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.

தலைமுடியின் நுனி வழியாக ஆத்மசக்தி வெளியேறுகிறது. நல்ல, தீய உணர்வுகள் அல்லது அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் போன்றது முடியின் நுனி. அப்படியானால் மொட்டை அடித்துக் கொள்கிறார்களே அவர்களை என்ன சொல்வது என்ற கேள்வி எழும் உங்களுக்குள். வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை. நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை என்பதை உணர்த்துவற்காகத்தான்.

மாதத்திற்கு ஒரு முறை உங்களது சீப்பை கழுவி சுத்தம் செய்துவிடுங்கள். இதேபோல் பற்கள் நீங்கிய சீப்பையும், அதிகமாக தேய்ந்த சீப்பையும் உபயோகப்படுத்தக் கூடாது. இப்படிப்பட்ட சீப்பை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு புதிய சீப்பை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

Readmore: வேகமெடுக்கும் கொரோனா: கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்..!!

KOKILA

Next Post

இன்று உலக உணவுப் பாதுகாப்பு தினம்!. ஏன் கொண்டாடப்படுகிறது?. அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம்! என்ன?

Sat Jun 7 , 2025
உணவுப் பாதுகாப்பு என்பது உலக மக்கள் அனைவரையும் பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை. உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவினால் ஏற்படும் அபாயங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 2018 இல் நிறுவப்பட்டது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் […]
World Food Safety Day 11zon

You May Like