2000 ரூபாயை என்னிடம் கொடுங்கள்..!! ஆனால்..!! வித்தியாசமாக விளம்பரம் செய்த இறைச்சி கடைக்காரர்..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதையடுத்து, தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ அனுமதி வழங்கியுள்ளது. இந்த நோட்டுகள் செப்டம்பர் 30 மேல் செல்லுபடி ஆகாது என தெரிந்து கொண்ட ஒரு கடைக்காரர் தனது விற்பனையை அதிகரிக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


டெல்லியில் உள்ள ஒரு இறைச்சிக் கடைக்காரர் “எங்களிடம் ரூ. 2000 நோட்டைக் கொடுங்கள், சுத்தமான இறைச்சிக் கடையான சர்தாரில் இருந்து 2100 ரூபாய்க்கு பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

CHELLA

Next Post

தமிழ்நாட்டில் 55,982 சிம் கார்டுகள் முடக்கம்!!

Thu May 25 , 2023
தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 55,982 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டு சிம் கார்டுகளை வழங்கிய 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், திருச்சி, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இது குறித்து வழக்குகள் பதிவாகியுள்ளது.  தற்போது வரை இது தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சைபர் கிரைம் […]
Sized SIM Card Swap

You May Like