சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் கிளென் மேக்ஸ்வெல்..!!

Glenn

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார்.


மேக்ஸ்வெல் 2012 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவரது 13 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 149 போட்டிகளில் விளையாடி, 3990 ரன்கள் குவித்து, 77 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 126 என்ற ஸ்ட்ரைக் ரேட் உடன் இருக்கும் மேக்ஸ்வெல், அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

சமீபகாலமாக பல காயங்களால் பாதிக்கப்பட்ட மேக்ஸ்வெல், உடல்நிலையை கருத்தில் கொண்டு, 50 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவை தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லியுடன் ஆலோசித்த பிறகே எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவு குறித்து கிளென் மேக்ஸ்வெல் பேசுகையில், “ஆஸ்திரேலியாவுக்காக சில போட்டிகளில் விளையாடியதை பெருமையாக உணர்கிறேன்.

அணியிலிருந்து நீக்கப்படுவது, மீண்டும் அழைக்கப்படுவது, சில உலகக் கோப்பைகளில் விளையாடுவது மற்றும் சில சிறந்த அணிகளின் ஒரு பகுதியாக இருப்பது என பல ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து வந்தேன். காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவது சவாலாக உள்ளது. எனது உடல்நிலை அணிக்கு தொந்தரவு தரக்கூடாது என்பதால்தான் இந்த முடிவு. சுயநலத்துக்காக நான் தொடர விரும்பவில்லை. எனவே, இப்போது விலகுவதே சரியான முடிவு என உணர்கிறேன் என்றார்.

2023 உலகக் கோப்பை வெற்றியில் சிறப்பான பங்களிப்பு வழங்கிய மேக்ஸ்வெல், “2027 உலகக் கோப்பை வரை நான் விளையாடுவேன் என நினைக்கவில்லை. எனது இடத்தில் இளம் வீரர்களை உருவாக்க இது சரியான நேரம்” என்றார். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன்பெர்க் தெரிவித்ததாவது: “மேக்ஸ்வெல்லின் அனல் பறக்கும் பேட்டிங், ரசிகர்களை கவர்ந்தது. அவரது ஆட்டம் உலகக் கிரிக்கெட்டில் ஒரு தனித்த அடையாளமாக இருந்தது. அவரது சேவைக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா நன்றியுள்ளதாகும்.” என்றார்.

அதேபோல், தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், “மேக்ஸ்வெல் ஒரு ஆற்றல் மிக்க வீரர். இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். பந்துவீச்சு, பேட்டிங், மற்றும் களத்திலுள்ள அவரது ஆற்றல் சிறப்பானது. T20 வடிவில் அவர் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட உள்ளார்,” எனக் கூறினார். மேக்ஸ்வெல் தற்போது தனது கவனத்தை 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள T20 உலகக் கோப்பை மீது செலுத்த உள்ளார்.

Read more: Walking Rule: உடல் எடையை குறைக்க உதவும்12-3-30 வாக்கிங் விதி.. ரிசல்ட் அட்டகாசமா இருக்கும்!..!!

Next Post

அச்சுறுத்தும் கோவிட்.. 2020-ல் நடந்த பேரழிவு ரிப்பீட் ஆகுமா? முன்னாள் WHO விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பதில்..

Mon Jun 2 , 2025
As the COVID-19 pandemic continues to spread, Dr. Soumya Swaminathan, former chief scientist of the World Health Organization (WHO), has weighed in on whether the 2020 disaster could be repeated.
148008 soumya swaminathan

You May Like