இந்திய மக்களின் சேமிப்பில் தங்கம் முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் தான், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ஆட்டம் காட்டி வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்றவைகளே காரணம்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது. இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது. தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.72,000ஐ தாண்டி புது வரலாறை படைத்தது. பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக போக்கு காட்டி வருகிறது.
அந்த வகையில், சென்னையில் இன்று (04.06.2025) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் ரூ.72,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,090-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்ததால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதே சமயம், வெள்ளி விலை நேற்றைய தினம் கிராமுக்கு ரூ.2 அதிகரித்த நிலையில், இன்றும் கிராமுக்கு ரூ.1 அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.