சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.72,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது.
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
ஜூன் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.2000-க்கும் மேல் குறைந்தது. ஆனால் நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது.. நேற்று ஒரே நாளில் ரூ.840 உயர்ந்ததால் நகைப்பிரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்றும் சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.45 உயர்ந்து, ரூ.9,065க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.72,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை ரூ.1200 உயர்ந்துள்ளது.
ஆனால் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.