ஒரே நாளில் ரூ.520 உயர்ந்த தங்கம் விலை.. கடும் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.44,800க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

gold jwellery hallmarking how to check 1677907251073 1677907251303 1677907251303

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.44,280க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.77.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800க்கு விற்பனையாகிறது.

RUPA

Next Post

தமிழக மக்களே..!! கொரோனாவால் அடுத்து என்ன ஆபத்து..? சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை..!!

Tue Apr 4 , 2023
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது அபாய அளவில் இல்லை என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, எனினும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய கொரோனா பரவலுக்கு xbb 1.16 பிரிவு தான் காரணமென தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்த […]
Corona

You May Like