சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
இதனிடையே கடந்த 10 நாட்களாகத் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமலேயே இருந்து வந்தது. இரண்டு நாட்கள் உயர்ந்தால் இரண்டு நாட்கள் சரிவது எனத் தங்கம் விலை மாறி மாறியே இருந்து வருகிறது. இந்த நிலை தொடரும் என எதிர்பார்த்த நிலையில் ஜூன் 2 ஆம் தேதியான நேற்று தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
காலையில் ஒரு சவரன் தங்கம் 240 உயர்ந்த நிலையில் மாலையில் மேலும் 880 உயர்ந்தது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9060க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,480க்கும் விற்பனையாகிறது. ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் ஜூன் 3ஆம் தேதியான இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்தது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,080க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,640 க்கும் விற்பனை செய்யபடுகிறது. வெள்ளி விலை ரூ.2000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.1,13,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Read more: அரசு பள்ளி மாணவர்கள் இனி ஆங்கிலத்தில் சுலபமா பேசி அசத்தலாம்.. புதிய திட்டம் அமல்..!!