இப்படியே போனா எப்படி? இன்றும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

1715241436 388

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 74560க்கு விற்பனையாகிறது..

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது..

அதன்படி சென்னையில் நேற்று வரலாறு காணாத வகையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.. நேற்று ஒரே நாளில், சவரனுக்கு ரூ.1560 உயர்ந்து ரூ.74,360க்கு விற்பனையானது. இதனால் நகைப் பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.9320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 74560க்கு விற்பனையாகிறது.. எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.120க்கு விற்பனையாகிறது.. ஒரு சவரனுக்கு ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது மறக்காம காப்பீடு எடுங்க.. நன்மைகள் நிறைய இருக்கு..!!

English Summary

Gold prices in Chennai today rose by Rs. 200 per sovereign and are being sold at Rs. 74560.

RUPA

Next Post

அகமதாபாத் துயரம்.. விசாரிக்க உயர்மட்டக் குழு அமைத்த மோடி அரசு.. 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவு..

Sat Jun 14 , 2025
The central government, headed by Prime Minister Narendra Modi, has set up a high-level committee to investigate the Air India plane crash that occurred on June 12.
Officials stand near the debris of the Air India E 1749858953016 1749858962478

You May Like