2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது.
தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. கிட்டத்தட்ட 10 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி நேற்று ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.78,000-ஐ தாண்டியது..
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் ரூ.10 குறைந்து , ரூ.9,795-க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரன் ரூ.80 குறைந்து, ரூ.ரூ.78,360kகு விற்பனை செய்யப்பட்டது.. இதன் மூலம் தங்கம் விலை கடந்த 3 நாட்களில் சவரன் ரூ.1,480 உயர்ந்த நிலையில் இன்று வெறும் ரூ.80 குறைந்துள்ளது நகைப் பிரியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் வெள்ளியின் விலையும் இன்று எந்த மாற்றமும் இல்லை.. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.137-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,37,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More : GST 2.0 : செப்., 22 முதல் இந்த பொருட்களின் விலை தாறுமாறாக உயரப்போகுது! முழு லிஸ்ட் இதோ..!



