தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை.
அமெரிக்க நாட்டின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது மற்றும் உலகில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் போர் உள்ளிட்ட காரணத்தால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்கள் விலை இறங்கினாலும், ஒரு சில நாட்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்குகிறது. ஒரு கிராமின் விலை 9 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தங்கம் நுகர்வை பொதுமக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று சவரனுக்கு ரூ.80 ரூபாய் உயர்ந்து ரூ.72,720க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.9,090-க்கு விற்பனையானது. இதன்மூலம் சென்னையில் கடந்த 3 நாட்களில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஜூன் 5 ஆம் தேதி நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்தது.
அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 74,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 9130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை 1360 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிலோ ரூ.1,14,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.