சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் – டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி தங்கத்தின் முதலீடு செய்வது அதிகரிப்பதால், ஆபரணத் தங்கம் விலையிலும் சற்றே உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது. இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது.
இந்த நிலையில், இன்று காலை சவரனுக்கு ரூ. 360 மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 8,995-க்கும் ஒரு சவரன் ரூ. 71,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஐந்தாவது நாள்களாக அதாவது மே 23ஆம் தேதி முதல் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.111 ஆகவே நீடிக்கிறது.
வாரத்தின் முதல் நாளான நேற்று (மே 26) காலை, வணிகம் தொடங்கியதும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,600க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more: வக்கீல் தேவையில்லை.. ஆன்லைனிலே ஈஸியா உயில் எழுதலாம்.. நேரமும் பணமும் மிச்சம்..!! எப்படி தெரியுமா..?