குட்நியூஸ்.. தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.440 சரிந்ததால் மகிழ்ச்சி..

gold 4 1

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது..

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது..

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இந்த வார தொடக்கத்தில் சற்று குறைந்தது. அதன்படி, சென்னையில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மீண்டும் உயர்ந்தது.. நேற்று ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.74,120க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.55 குறைந்து, ரூ.9210க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. வெள்ளி ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்ததால் நகைப்பிரியர்களும் சாமானிய மக்களும் அதிர்ச்சி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : ஷாக்!. கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டும்?. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சொன்ன தகவல்!

RUPA

Next Post

தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கை வெளியீடு...!

Fri Jun 20 , 2025
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில் தொலைத்தொடர்பு, கேபிள் […]
Central 2025

You May Like