#Flash : ஹேப்பி நியூஸ்.. மீண்டும் தங்கம் விலை கிடுகிடு சரிவு.. நகைப்பிரியர்கள் நிம்மதி..

Firefly indian family purchasing gold ornaments in jewellry with 16 9 ratio with night glit 766387 1

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.72,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 60 குறைந்து, ரூ.9,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.72,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Read More : சட்டவிரோத பண பரிமாற்றம்: பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!!

English Summary

In Chennai today, the price of gold fell by Rs. 480 per sovereign and is being sold at Rs. 72,400.

RUPA

Next Post

#Flash : மதுரை பழைய பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து.. தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்..

Wed Jul 9 , 2025
மதுரையில் உள்ள பழைய பேப்பர் குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.. மதுரையில் வைகை தென்கரையின் ஓபுலா படித்துறை பகுதியில் உள்ள பழைய பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.. அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ வேகமாக பரவி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.. இதனால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளது.. தகவலறிந்து பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.. இந்த விபத்தில், குடோனில் […]
madurai147 2025 07 09 09 25 15 1

You May Like