விமான பயணிகளுக்கு இது நடந்தால்.. டிக்கெட் கட்டணத்தில் 75% திருப்பி செலுத்தப்படும்.. புதிய அறிவிப்பு..

விமானங்கள் ரத்து, விமானங்கள் தாமதம் போன்ற காரணங்களால் பயணம் செய்ய முடியாத விமானப் பயணிகளுக்கான விதிகளில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) திருத்தம் செய்துள்ளது.

விமானத்தில் ஏற மறுக்கப்பட்டாலோ, விமானங்கள் ரத்து செய்யப்படுவதாலோ, அல்லது விமானங்களில் தாமதம் ஏற்படுவதாலும் பயணிகளுக்கு வழங்க வேண்டிய வசதிகள் தொடர்பான விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) திருத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அதைவிட குறைவான வகுப்பில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுவது குறித்து விமானப் பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்தது.. இதன் பின்னணியில் விதிமுறைகளை திருத்த விமான ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே இதுபோன்ற தரமிறக்கப்படும் டிக்கெட்களின் கட்டணத்தில் குறிப்பிட்ட தொகையை விமான நிறுவனங்கள் திருப்பி செலுத்த வேண்டும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது..

நடுவானில் தெருச் சண்டை..!! தெறித்து ஓடிய பயணிகள்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளை அடுத்த வகுப்பில் இலவசமாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி உள்நாட்டு விமானங்களில் முன்பதிவு செய்த வகுப்பை விட குறைவான வகுப்பில் பயணம் செய்தால், சம்பந்தப்பட்ட பயணிக்கு, டிக்கெட்டின் விலையில் 75 சதவீதத்தை, வரி உட்பட, விமான நிறுவனம் செலுத்த வேண்டும்.. சர்வதேச டிக்கெட்டின் தரம் குறைக்கப்பட்டால், 1,500 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான தூரம் பறக்கும் விமானங்களுக்கு வரி உட்பட டிக்கெட் விலையில் 30 சதவீதத்தை பயணி பெறுவார்.

1,500 முதல் 3,500 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் விமானத்தில், 50 சதவீதத் தொகை பயணிக்கு திரும்ப கிடைக்கும்.. 3,500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் விமானத்தில் டிக்கெட் விலையில் 75 சதவீதம் திருப்பிச் செலுத்தப்படும். இந்த புதிய விதிமுறைகள் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Attention of air travelers ..! Now you need to bring it ..?

விமானப் பயணிகளின் பயணச்சீட்டு தரமிறக்கப்படுவதால் பாதிக்கப்படும் விமானப் பயணிகளின் உரிமைகளை வலுப்படுத்தும் வகையில், விமானத்தில் ஏற மறுப்பது, விமானங்களை ரத்து செய்தல் மற்றும் விமானங்களில் தாமதம் போன்ற காரணங்களால் பயணிகளுக்கு வழங்க வேண்டிய வசதிகள் தொடர்பான விதிகளை விமான போக்குவரத்து இயக்குநரகம் திருத்தியுள்ளது.

விமானங்களில் பிசினஸ்அல்லது பிரீமியம் எகானமி வகுப்பில் முதலில் முன்பதிவு செய்த பயணிகள், தாங்கள் பணம் செலுத்தியதை விட குறைந்த வகுப்பில் பயணம் செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்படுவது டிக்கெட் தரமிறக்கப்படுவது என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

RUPA

Next Post

அசத்தல்...! வீட்டில் பெண் குழந்தை இருந்தா ரூ.25,000 வழங்கும் அரசு…! எப்படி பெறுவது தெரியுமா…? முழு விவரம்

Thu Jan 26 , 2023
முதலமைச்சரின்‌ பெண்‌ குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ முதலமைச்சரின்‌ பெண்‌ குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்‌ பயன்பெற ஒரு பெண்‌ குழந்தை அல்லது இரண்டு பெண்குழந்தையுடன்‌ கணவனோ, அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்‌. இரண்டாவது பெண்‌ குழந்தை பிறந்து 3 வயது […]
money 4

You May Like