மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதாமலேயே கல்லூரிகளில் சேரலாம் என இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாட்டில் இயங்கக் கூடிய பல்வேறு கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவில் சேர வேண்டும் என்றால் மாணவர்கள், அந்தந்த கல்லூரிகளில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அந்த வகையில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட 15 வகையான நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதாமலேயே சேரலாம் என இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் தொலைதூரக் கல்வியில் நுழைவுத் தேர்வு எழுதாமல் மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கல்லூரியில் அறிவிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouiop.samarth.edu/ என்ற இணையதளத்தில் இன்றைக்குள் (ஜனவரி 31) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.