இளைஞர்களுக்கு குட்நியூஸ்!… AI தொழில்நுட்பத்தில் 45,000 வேலைவாய்ப்புகள்!… TeamLease Digital அறிவிப்பு!

AI தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு இந்தியாவில் மட்டும் 45 ஆயிரம் வேலை வாய்ப்பு உள்ளது என TeamLease Digital என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலகில் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்தநிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) மயமாக்கப்பட்ட உலகில் தற்போது அதன் பயனும் அதிகரித்துவரும் வேளையில் அதற்கான வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதன்படி இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பாக தரவு விஞ்ஞானிகள் மற்றும் இயந்திர கற்றல் (ML) பொறியாளர்கள் அதிக தேவை உள்ள தொழில்களில் கிட்டத்தட்ட 45,000 வேலைவாய்ப்புகள் இருப்பதாக TeamLease Digital என்ற தொழில்நுட்ப நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அளவிடக்கூடிய இயந்திர கற்றல் எம்எல் (ML) பயன்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது, ஸ்கிரிப்டிங் மொழிகளில் நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் வழக்கமான ML மாதிரிகளை உருவாக்கும் திறன் கொண்ட AI நிபுணர்களுக்கான தேவை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.

இந்த நிலையில் AI தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு இந்தியாவில் மட்டும் 45 ஆயிரம் வேலை வாய்ப்பு உள்ளது என TeamLease Digital என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டேட்டா விஞ்ஞானிகள் மற்றும் எம்எல் என்று கூறப்படும் இயந்திர கற்றல் பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பத்திற்கு தேவைப்படுவார்கள் என்று கூறியுள்ளது.இந்தியாவின் டேட்டா இன்ஜினியரிங் பணிகளில் ஆண்டுக்கு 14 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் இந்த வேலைகளுக்கு ஆட்கள் அதிகமாக தேவைப்படுவார்கள் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் எம்எல் இன்ஜினியர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், புதிய டேட்டா விஞ்ஞானிகள் தலா 14 லட்சம் வரை சம்பாதிப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த வேலைக்கு அதிக அளவு ஆட்கள் தேவைப்படும் என்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் படித்து முடித்த உடனே வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த துறையில் ஒரு சில வருடங்கள் அனுபவம் இருந்தால் ஆண்டுக்கு 25 முதல் 45 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறலாம் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் காரணமாக ஒரு சில வேலை வாய்ப்புகள் பறிபோனாலும் இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இந்த தொழில்நுட்பத்திற்கு வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று இந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

KOKILA

Next Post

இந்தியாவில் 6ஜி சேவை எப்போது?... புதிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி!... முழுவிவரம் உள்ளே!

Sat Mar 25 , 2023
இந்தியாவில் 6ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்குவதற்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில், பல துறை அமைச்சகங்கள், துறைகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்கள், ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தரநிர்ணய அமைப்புகள் மற்றும் தொழில் துறையினர் ஆகியோர் இணைந்து 6ஜி தொழில்நுட்ப புத்தாக்க குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு […]
6G globe Adobe rm e1652782147976

You May Like