2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. எனினும் கடந்த வாரத் தொடக்கத்தில் முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், பின்னர் மீண்டும் 3000 வரை உயர்ந்தது.. குறிப்பாக காலையில் குறைவதும் மாலையில் அதிரடியாக உயர்வதும் என தங்கம் விலை ஆட்டம் காட்டி வந்தது.. அந்த வகையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது..
இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ. 11,250க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து தங்கம் விலை ரூ.90,000-க்கு விற்பனையாகிறது..
அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது… ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.165க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளதால் நகைப் பிரியர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
Read More : மாதம் ரூ.1.26 லட்சம் வரை சம்பளம்.. மத்திய அரசின் செபி நிறுவனத்தில் வேலை..! உடனே விண்ணப்பிங்க..



