ரயில் டிக்கெட் முன்பதிவுகளின் போது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. நேற்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மாற்றங்களில் தரவரிசையில் முன்னேற்றங்கள், புதிய பயணிகள் முன்பதிவு முறை (PRS) மற்றும் தட்கல் முன்பதிவுகளுக்கான நெறிப்படுத்தப்பட்ட அங்கீகாரம் ஆகியவை அடங்கும். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த வரவிருக்கும் சீர்திருத்தங்களை மதிப்பாய்வு செய்துள்ளார்.
“டிக்கெட் முறை ஸ்மார்ட்டாகவும், வெளிப்படையாகவும், அணுகக்கூடியதாகவும், திறமையாகவும் இருக்க வேண்டும். திட்டமிடல் பயணிகளின் வசதியில் கவனம் செலுத்த வேண்டும். இந்த அமைப்பு நமது பயணிகளுக்கு ஒரு சீரான மற்றும் வசதியான பயண அனுபவத்தை உறுதி செய்ய வேண்டும்” என்று ரயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ குறிப்பில் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு ஏற்படும் நிச்சயமற்ற தன்மையைக் குறைக்க, ரயில் புறப்படுவதற்கு “எட்டு மணி நேரத்திற்கு” முன்பே முன்பதிவு விளக்கப்படங்களைத் தயாரிக்க இந்திய ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு முன் புறப்படும் ரயில்களுக்கான விளக்கப்படங்கள், முந்தைய நாள் இரவு 9 மணிக்குள் தயாராக இருக்கும். அதாவது இதுவரை புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே விளக்கப்படங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த புதிய மாற்றம் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, எந்த இடையூறும் இல்லாதவாறு இதை படிப்படியாக செயல்படுத்துமாறும் ரெயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் தங்களுடைய டிக்கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு ஏற்படும் கடைசிநேர பதற்றமும் தவிர்க்கப்படும். தொலைதூர பயணிகள், புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது பயனளிக்கும். காத்திருப்போர் பட்டியல் உறுதிபடுத்தப்படவில்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு இந்த நடைமுறை மிகவும் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு நவீன பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) 2025 டிசம்பரில் அறிமுகமாக இருக்கிறது. இது தற்போது உள்ள சுமையை விட பத்து மடங்கு அதிகமாக கையாளக் கூடிய வகையில், நுட்பமாகவும், விரிவாக்கத்திற்குத் தகுந்த வகையிலும் (agile மற்றும் scalable) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாடு, டிக்கெட் முன்பதிவு திறனைக் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது நிமிடத்திற்கு 32,000 டிக்கெட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியுவது போல், புதிய அமைப்பில் நிமிடத்திற்கு 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியும்.
அனைவரும் பயன்படுத்தக்கூடிய விசாரணை (enquiry) திறன் பத்து மடங்கு அதிகரிக்கப்பட இருப்பதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தற்போது நிமிடத்திற்கு 4 லட்சம் விசாரணைகளை கையாளும் திறன் உள்ள நிலையில், புதிய அமைப்பில் நிமிடத்திற்கு 40 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாரணைகளை கையாள முடியும். மேலும், புதிய பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) பல மொழிகளைக் கொண்ட இடைமுகத்துடன் (multilingual interface) வர உள்ளது. பயணிகள் எளிதாக டிக்கெட் பதிவு செய்யும் வகையில், பயனர் நட்பு வசதிகள் (user-friendly booking options) வழங்கப்படுகின்றன. இதில், பயணிகள் தங்களுக்குப் பிடித்த இடங்களை தேர்வு செய்யவும், கட்டண அட்டவணையை (fare calendar) பார்வையிடவும் முடியும்.