சமையல் எண்ணெய் ரகங்களின் இறக்குமதி வரியை 20ல் இருந்து 10 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து எண்ணெய் விலையை குறைக்க நிறுவனங்களுக்கு மத்திய உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
சமையல் கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு உயா்த்தியதைத் தொடா்ந்து, சமையல் எண்ணெய் ரகங்களின் சில்லறை விற்பனை விலை பலமடங்காக உயா்ந்தது. இதனால் நுகா்வோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். உணவுப் பணவீக்கமும் அதிகரித்தது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக, சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருவது குறித்து, மத்திய உணவுத் துறை அதிகாரிகள் டில்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் உணவுப் பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில் கச்சா சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு குறைத்தது. சூரியகாந்தி, பாமாயில், சோயாபீன் சமையல் எண்ணெய் ரகங்களின் இறக்குமதி வரியை 20ல் இருந்து 10 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. வரி குறைப்பின் பலனை நுகர்வோர் பெற, சமையல் எண்ணெய் ரகங்களின் விலையை குறைக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதனால், கச்சா சமையல் எண்ணெயைக் காட்டிலும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி 8.75 சதவீதத்திலிருந்து 19.25 சதவீதமாக அதிகரித்தது. இது, உள்நாட்டு கச்சா சமையல் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை ஊக்குவிக்க உதவியது. அதன்படி, விநியோகஸ்தா்களுக்கான விலை மற்றும் அதிபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆா்பி) ஆகியவற்றை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகக் குறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Readmore: இரவோடு இரவாக தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…!