இணையப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கூகுள் குரோம் (Google Chrome) உலாவியின் பழைய பதிப்புகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று மத்திய அரசின் CERT-In (Computer Emergency Response Team – India) அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது.
புதிய பதிப்புகளுக்கு மேம்படுத்தப்படாத பழைய குரோம் பிரவுசர்களில் தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிக்கலைப் பயன்படுத்தி, இணைய குற்றவாளிகள் பயனாளிகளின் தரவுகளைத் திருடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக CERT-In தெரிவித்துள்ளது.
யார் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்..?
குறிப்பாக, கூகுள் குரோம்-இன் பதிப்பு எண் 142.0.7444.59/60 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள் (Linux, Windows, மற்றும் Mac OS-களில் பயன்படுத்துவோர்) உடனடியாக தங்கள் குரோம் பிரவுசரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று CERT-In அறிவுறுத்தியுள்ளது.
அப்டேட் செய்வது எப்படி..?
பயனாளர்கள் தங்கள் கணினி அல்லது மொபைல் சாதனத்தில் நிறுவப்பட்டிருக்கும் கூகுள் குரோம் பிரவுசரின் Settings பகுதிக்குச் சென்று, About Chrome என்ற பிரிவில் தங்கள் பதிப்பு எண்ணைச் சரிபார்த்து, புதிய பதிப்புக்கு உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தனிப்பட்ட மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் திருடு போவதைத் தடுக்க உதவும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Read More : விநாயகரை வழிபடும்போது தோப்புக்கரணம், தலையில் குட்டு வைக்க என்ன காரணம்..? ஆன்மீகமும், அறிவியலும்..!!



