தமிழகத்தில் லஞ்சத்தால் மூழ்கும் அரசு அலுவலகங்கள்!!! லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் 1.12 கோடி பறிமுதல்?

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசு அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையில் டாஸ்மாக் வசூலை மிஞ்சும் அளவுக்கு ஒரே நாளில் லஞ்சமாக வாங்கிய பணம் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.


வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம் என பல்வேறு அலுவலங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் 1,12,57,803- ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

7e9cd385 7492 4528 b63b 22a246c75e87

மேலும் எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் நெடுஞ்சாசலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.70 லட்சம் கைப்பற்றப்பட்டது. திருவாரூர் நெடுஞ்சாலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 8,8700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக அவ்வப்போது புகார்கள் வந்தாலும் அவைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsnation_Admin

Next Post

டி20 உலக கோப்பை போட்டியில் பும்ராவிற்கு பதில் இவர் தான் - பிசிசிஐ அறிவிப்பு!

Sat Oct 15 , 2022
வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இடம்பிடித்திருந்த பும்ரா, காயம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இருந்து விலகினார். கடந்த வாரம் 14 வீரர்களுடன் ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி. கடந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் பும்ரா விளையாடினார். அதற்கு அடுத்ததாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற […]
bumrah

You May Like