கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள கண்ணாட்டுவிளை பகுதியில் எடுக்கின்ற அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் அருண் ஜீவன்(47) என்பவர் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவன் ஒருவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி மாணவன் மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்று திரும்பி இருக்கிறார். அப்போது அந்த பகுதிக்கு வந்த ஆசிரியர் அருள் ஜீவன் மாணவனின் தோளில் கை வைத்து லாவகமாக பேசி அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் மாணவனின் பிறப்புறுப்பில் வலி ஏற்பட்டுள்ளது.
பின்னர் இது குறித்து அந்த மாணவன் தன்னுடைய தந்தையிடம் தெரிவித்து கதறி அழுதிருகிறார். ஆகவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் வழங்கினார் ஆனால் இந்த புகார் குறித்து ஆசிரியர் மீது எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் நேற்று குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனை அறிந்து கொண்ட ஆசிரியர் அருள்ஜீவன் திடீரென்று தலைமறைவானார். ஆனால் விசாரணைக்கு பிறகு காவல்துறையினர் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கின்ற ஆசிரியர் அருள் ஜீவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.