அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! முன்பணம் வழங்க தமிழக அரசு உத்தரவு..!!

அரசு ஊழியர்கள் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், ”நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்களை வாங்க விரும்பும் மத்திய அரசு ஊழியா்களுக்கு அவா்களது பணிநிலைக்கு ஏற்ப முன்பணம் வழங்கும் உத்தரவை மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. இதேபோல், தமிழக அரசில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை முன்பணத் தொகை அளிக்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! முன்பணம் வழங்க தமிழக அரசு உத்தரவு..!!

இந்நிலையில், வாகனச் சந்தைகள் நாளுக்கு நாள் விரிவாக்கம் பெற்று வருகின்றன. குறிப்பாக, புதிய புதிய வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மின்சார வாகனங்களும் அதிக அளவு பிரபலம் அடைந்துள்ளன. இந்த வாகனங்களைப் பெறவும் அரசு ஊழியா்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள். மின்சார வாகனங்களின் பயன்பாட்டால் காா்பன்டை-ஆக்சைடு வாயுவும் குறையும் நிலை ஏற்படும் என போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! முன்பணம் வழங்க தமிழக அரசு உத்தரவு..!!
கோப்புப் படம்

எனவே, தமிழக அரசு ஊழியர்கள் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு வசதியாக அதற்கும் முன்பணத் தொகை வழங்க போக்குவரத்துத் துறை பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று, தமிழக அரசு ஊழியர்களும் மின்சார வாகனங்களை வாங்க முன்பணம் அனுமதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

’விடிய விடிய பெய்தும் ஓயாத கனமழை’..!! அடுத்த 3 மணி நேரத்திற்கு பயங்கர எச்சரிக்கை..!!

Sun Nov 13 , 2022
சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக – கேரள […]
06 08 2022 pak rain 22958503 750x500 62ee85cfb80871 1661520397

You May Like