Breaking : பெரும் சோகம்..! பிரபல தமிழ் இயக்குனர் வி.சேகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

v sekar

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான வி.சேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது..


பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வி. சேகர், 1980–90களில் குடும்பக் கதைகளுக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றவர். இயக்குனராக மட்டுமல்லாது, திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாகவும் அவர் முக்கியமான இடத்தை பிடித்தார். அவரின் படங்களில் குடும்ப உறவுகள், மனித மதிப்புகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்து பேசியிருந்தார்..

ஒண்ணா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, நான் பெத்த மகனே, காலம் மாறி போச்சு, விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, வீட்டோட மாப்பிள்ளை, நம்ம வீட்டு கல்யாணம் போன்ற பல வெற்றிப் படங்களை அவர் இயக்கி, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.

சினிமா துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய வி. சேகர், பல புதிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்து முக்கிய பங்காற்றினார். இந்த சூழலில் வி.சேகரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

Read More : ஒரு காலத்தில் ஹிட் ஹீரோயின்.. பணத்துக்காக நண்பர்களே படுக்கைக்கு அழைத்த சோகம்..! நடிகை கிரணுக்கு இப்படி ஒரு நிலமையா..?

RUPA

Next Post

கருட புராணம் : இந்த 3 வகையான மனிதர்களுடன் நட்பு கொண்டால், உங்கள் வாழ்க்கையே பாழாகிவிடும்! உடனடியாக விலகி விடுங்கள்!.

Fri Nov 14 , 2025
இந்து மதத்தின் 18 பெரிய புராணங்களில் ஒன்றான கருட புராணம், பிறப்பு மற்றும் இறப்பின் ரகசியத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு மனிதன் பூமியில் எவ்வாறு வாழ வேண்டும், அவர்கள் எந்த வகையான உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய தார்மீக பாடங்களையும் கற்பிக்கிறது. விஷ்ணுவுக்கும் அவரது வாகனமான கருடனுக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் உள்ள இந்த புராணம், கெட்டவர்களின் சகவாசத்திலிருந்து விலகி இருக்குமாறு கடுமையாக அறிவுறுத்துகிறது. சர்வவல்லமையுள்ளவர் சொல்வது […]
garuda purana

You May Like