பெரும் சோகம்..!! இலவச உணவுக்காக ஏற்பட்ட கூட்ட நெரிசல்..!! 16 பேர் பரிதாப பலி..!! பதறும் பாகிஸ்தான்..!!

பாகிஸ்தானில் இலவச உணவு விநியோகம் செய்யும் இடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு (35%) அதிக பணவீக்கத்திற்கு மத்தியில் பட்டினி மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ரம்ஜான் பண்டிகையின் போது இலவச உணவுக்காக ஏராளமான மக்கள் கூடுகின்றனர். பெஷாவர் மையத்தில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் திணறியதால், கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதாகவும், துப்பாக்கியை வானத்தைப் பார்த்துச் சுட்டதாகவும் உணவுத் துறை அமைச்சர் கூறியதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனால், நூற்றுக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் பீதியடைந்து ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஓடியுள்ளனர். அவர்களில் சிலர் சாக்கடையில் விழுந்தும், பலர் தங்கள் சமநிலையைக் காப்பாற்றிக் கொண்டு தப்பி ஓடினார்கள். இந்த சம்பவத்தில் பெஷாவரில் 11 பேரும், கராச்சி மற்றும் பிற இடங்களில் 5 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி உத்தரவிட்டுள்ளார்.

CHELLA

Next Post

”என் கூட அப்படியெல்லாம் இருந்துவிட்டு இப்போ கண்டுக்காம போறியா”..? 17 வயது சிறுமிக்கு 22 முறை கத்திக்குத்து..!!

Mon Apr 3 , 2023
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சாந்தாகுருஸ் வக்கோலாவை சேர்ந்தவர் சோபியா சேக். 17 வயதான இச்சிறுமி, தான் வசித்து வந்த அதே பகுதியை சேர்ந்த அம்பாஜி மோரே என்ற (30) வாலிபருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் வாலிபரின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பேசுவதை தவிர்த்திருக்கிறார் அந்த சிறுமி. இதனால், ஆத்திரமடைந்த வாலிபர், சோபியாவின் வீட்டிற்கே சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். என்னிடம் […]
love sunset together preview

You May Like