மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகரில் உள்ள பாங்குயில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 29 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 25ம் தேதி பாங்கி நகரத்தில் உள்ள பார்த்தேலமி போகண்டா (Barthelemy Boganda) உயர்நிலைப்பள்ளியில், 5,300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்புத் தேர்வை எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது, பள்ளி வளாகத்தில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரை பழுது சரி செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால் அச்சமடைந்த மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 29 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவசர சேவைகள் குழுவினர், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து அதிபர் சென்ட்ரல் ஆப்ரிக்கன் ரிபப்ளிக் ஜனாதிபதி ஃபாஸ்டின்-ஆர்கேஞ்ச் டூஅடேரா (Faustin-Archange Touadéra), தேசிய துக்க நாள்களாக அறிவித்தார். மேலும், வெடிப்பு சம்பவத்தின் தெளிவான காரணம் மற்றும் இதற்கு யார் காரணம் என்பதை கண்டறியும் நோக்கில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என சென்ட்ரல் ஆப்ரிக்கன் ரிபப்ளிக் அரசு தெரிவித்துள்ளது.
Readmore: 147 ஆண்டுகள் பழமை!. வெறும் ரூ.117க்கு விற்கப்படும் லண்டன் ராயல் ஹோட்டல்!. என்ன காரணம்?