பெரும் சோகம்!. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மாரடைப்பால் மரணம்!. பிசிசிஐ இரங்கல்!.

cricketer dilip doshi 11zon

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான திலீப் தோஷி மாரடைப்பால் காலமானார். இவருக்கு பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார். திலீப் தோஷி நேற்று (திங்கள்) லண்டனில் காலமானார். அவருக்கு வயது 77. பல தசாப்தங்களாக லண்டனில் வசித்து வந்த திலீப் தோஷி, மாரடைப்பால் இறந்தார். அவரது மரணச் செய்தி கிரிக்கெட் உலகில் பலருக்கும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இடது கை சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

32 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நுழைந்த அவர், நான்கு வருட வாழ்க்கையில், 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து திடீரென கிரிக்கெட்டிலிருந்து விலகிக் கொண்டார். திலீப் தோஷி தனது கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி ஸ்பின் பஞ்ச் என்ற பெயரில் ஒரு சுயசரிதையையும் எழுதியுள்ளார். திலீப் தோஷியின் மனைவி கலிந்தி, ஒரு மகன் நயன் மற்றும் ஒரு மகள் விசாகா ஆகியோர் உள்ளனர்.

திலீப் தோஷி இந்தியாவைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர். 1979 முதல் 1983 வரை இந்திய சர்வதேச அணியில் இடம் பெற்றிருந்தார். 32 வயதில் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார். இந்தியாவுக்காக 33 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். திலீப் தோஷி 33 போட்டிகளில் 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆறு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

திலீப் தோஷி தனது வாழ்க்கையில் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 3.96 எகானமியுடன் பந்து வீசினார் மற்றும் மொத்தம் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர, திலீப் தோஷி முதல் தர கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளார். அவர் சவுராஷ்டிரா, வங்காளம், பெர்க்ஷயர் மற்றும் நாட்டிங்ஹாம்ஷயர் ஆகியவற்றிற்காக முதல் தர கிரிக்கெட்டை விளையாடியுள்ளார்.

Readmore: குஷி..! மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க 10,000 இடங்களில் சிறப்பு முகாம்…! வெளியான சூப்பர் அறிவிப்பு…!

KOKILA

Next Post

பரபரப்பு..! ஈரான், இஸ்ரேல் போர் உச்சம்... சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து...!

Tue Jun 24 , 2025
ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின. ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது […]
flight 2025 1

You May Like