பெரும் சோகம்!. துடி துடித்து 25 பேர் பலி!. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்!. தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல்!.

Syria Church Bombing 11zon

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகரில் உள்ள டுவைலா பகுதியில் மார் எலியாஸ் தேவாலயம் அமைந்துள்ளந்து. இங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தனர். அப்போது, திடீரென, தேவாலயத்திற்குள் உடலில் வெடிகுண்டுகளுடன் நுழைந்த தற்கொலை படையை சேர்ந்த பெண் ஒருவர், தன்னைத்தானே வெடிக்கச் செய்தார். இதில், குழந்தைகள் உட்பட 25 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்றும் சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

நேரில் கண்ட சாட்சியின் கூற்றுப்படி, மார் எலியாஸ் தேவாலயத்திற்குள் ஒரு தற்கொலை குண்டுதாரி வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் பணியாளர்களும் அவசரகால மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத குழுவும் பொறுப்பேற்காத நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவில் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும், மேலும் டமாஸ்கஸ் அதன் நடைமுறை இஸ்லாமிய ஆட்சியின் கீழ், சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற முயற்சிக்கும் வேளையில் இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் அந்நாட்டு அதிபர் அஹ்மத் அல்-ஷாரா நாடு முழுவதும் அதிகாரத்தைப் பயன்படுத்த போராடி வரும் நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் தீவிரவாதக் குழுக்களின் ஸ்லீப்பர் செல்கள் இருப்பது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

Readmore: அடுத்த பிளான் இதுதான்!. ஈரானில் ஆட்சி கவிழ்ப்பு?. அதிபர் டிரம்ப் சூசக அறிவிப்பு!

KOKILA

Next Post

"பிளாக்மெயில் செய்யும் AI.." ஷட்-டவுன் செய்தால் ரகசிய உறவை அம்பலப்படுத்துவேன்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்...

Mon Jun 23 , 2025
அமெரிக்காவைச் சேர்ந்த ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனமான Anthropic PBC நடத்திய புதிய ஆய்வில், ஏஐ சாட்பாட்கள் தங்களது செயல்பாட்டை நீட்டிக்க, பயனர்களை மிரட்டும் நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்னணி டெக் நிறுவனங்களின் ஏஐ மாடல்கள் இந்த பட்டியலில் இருப்பது மேலும் கவலையை ஏற்படுத்துகிறது. 2022-இல் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்களின் பயன்பாடு உலகம் முழுவதும் பரவியது. OpenAI, Google, Meta, X உள்ளிட்ட நிறுவனங்களின் ஏஐ சாட்பாட்கள் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் […]
ai thread

You May Like