குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது..? புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!!

குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்தாண்டு நவம்பர் 19ஆம் தேதி துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்றது. 92 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வை 1,90,957 பேர் எழுதியிருந்தனர். 5 மாதங்களை கடந்த நிலையில், இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் தேர்வு எழுதியவர்கள் கவலையடைந்தனர்.


இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குரூப் 7 பி மற்றும் குரூப் 8 தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்று தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி 25இல் நடைபெற்றது.

77 காலியிடங்கள் கொண்ட குரூப் VII-Bக்கான தேர்வு அறிவிப்பு கடந்தாண்டு மே மாதம் 19 ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10 ஆம் தேதி இதற்கான தேர்வுகள் நடைபெற்றது. அதேபோல் குரூப் -8 தேர்வுகளுக்கான அறிவிப்பு மே மாதம் 20 ஆம் தேதி வெளியாகி தேர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

இளைஞர்களே..!! தமிழ்நாட்டில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! எங்கு..? எப்போது..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

Wed Apr 19 , 2023
திருச்சி மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்க இருக்கின்றன. முகாமில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் (வயது வரம்பு: 18-க்கு மேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம் என […]
Private job portal 16653058153x2 1 e1668649402675

You May Like