பரபரப்பு..‌! குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு…? சர்ச்சையாக மாறிய விவகாரம்…!

ans sheet 2025

குரூப்-4 விடைத்தாள் அட்டை பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சையாக மாறியுள்ளது.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு, கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 13.48 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 3.935 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் அடுத்த மூன்று மாதங்களில் வெளியிடப்படும்.

தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளியிடப்பட்டன. இதில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட குரூப்-4 விடைத்தாள் அடங்கிய பெட்டிகளில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுத்தியுள்ளது. அட்டை பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சையாக மாறியது. ஏற்கனவே மதுரையில் பாதுகாப்பு இல்லாமல் கேள்வித்தாள்கள் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையான நிலையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

லட்சுமி தேவி வீடுதேடி வர வேண்டுமா?. இந்த 6 விஷியங்களை பண்ணுங்க!. செல்வம் செழிக்கும்!

Tue Jul 22 , 2025
இந்து மதத்தில், செல்வம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருபவர் என்ற மரியாதைக்குரிய இடத்தை லட்சுமி தேவி வகிக்கிறார். இந்த உலகில், லட்சுமியால் ஆளப்படும் தன் (செல்வம்) மற்றும் தானியம் (தானியங்கள்) ஆகியவற்றின் ஆசீர்வாதங்கள் இல்லாமல் எந்த வாழ்க்கையும் நிலைத்திருக்க முடியாது என்று நம்பப்படுகிறது. இயற்கையாகவே, ஒவ்வொரு வீடும் லட்சுமி தேவியின் தெய்வீக இருப்பையும் அருளையும் விரும்புகிறது. பாரம்பரிய நம்பிக்கையின்படி, லட்சுமி தேவி ஒரு வீட்டை ஆசீர்வதிக்கும்போது, அந்தக் […]
Goddess Lakshmi 11zon

You May Like