குஜராத் : பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு.. பாலம் இடிந்து விழுந்து விபத்தில் ஆற்றில் விழுந்த 4 வாகனங்கள்..

20250709045638 gb

குஜராத்தில் 45 ஆண்டுகள் பழமையான கம்பீரா பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்ட காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்ததில் குறைந்தது 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. காலை 7:30 மணியளவில் மாநில நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது..


வதோதரா மாவட்டத்தில் உள்ள பத்ராவை ஆனந்த் மாவட்டத்துடன் இணைத்த பாலம் நீண்ட காலமாக இடிந்து விழும் நிலையில் இருந்தது.. இந்த சூழலில் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்ட 45 ஆண்டுகள் பழமையான காம்பிரா பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

எஸ்பி கௌரவ் ஜசானி இதுகுறித்து பேசிய போது, “ஆனந்த் மற்றும் வதோதராவை இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. மூன்று முதல் நான்கு வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.” என்று தெரிவித்தார்.

முஜ்பூர் கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.. இரண்டு லாரிகள், ஒரு பொலேரோ ஜீப் மற்றும் மற்றொரு ஜீப் கடந்து சென்றபோது பாலம் திடீரென இடிந்து விழுந்தது.. 4 வாகனங்களும் இடிபாடுகளின் இருபுறமும் ஓடும் மஹிசாகர் ஆற்றில் விழுந்தன. இந்த தகவலறிந்ததும், முஜ்பூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராமவாசிகள் மீட்பு பணிக்கு உதவினர். சில உள்ளூர்வாசிகள் ஆற்றில் இறங்கி நீரில் மூழ்கிய வாகனங்களிலிருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்க உதவினார்கள். இதையடுத்து

பல தசாப்தங்களாக பழமையான பாலத்தை சரிசெய்ய பலமுறை கோரிக்கை வைத்த போதும், அரசு அதனை புறக்கணித்துவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறியதால் பாலம் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். வதோதரா மற்றும் ஆனந்த் இடையேயான முக்கிய இணைப்பான காம்பிரா பாலம், பல ஆண்டுகளாக வெளிப்படையாக மோசமடைந்து, அதிக போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை என்று மக்கள் தெரிவித்தனர்.

பாலம் இடிந்து விழுந்த சிறிது நேரத்திலேயே, பத்ரா மம்லதார், உள்ளூர் காவல்துறை மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள், பிஐ சிசோடியா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆற்றில் இருந்து வாகனங்களை மீட்டு, காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன..

Read More : கலப்படம் செய்யப்பட்ட கள் அருந்திய 15 பேருக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி…

English Summary

The collapse of the 45-year-old Gambhira Bridge in Gujarat has left three people dead, causing shock.

RUPA

Next Post

Bigg Boss-ல Ai Contestant ஆ..? அட ஆமாங்க.. இனி என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சமே இருக்காது..!! இது எப்படி செயல்படும்..?

Wed Jul 9 , 2025
இந்தி பிக்பாஸ் 19வது சீசனில் ஏஐ போட்டியாளர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழி பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அ ற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. ஒரு சீசன் முடிந்த ஆறாவது மாதத்திலேயே அடுத்த சீசனை துவங்குகிறார்கள். ஜனவரி 19ம் தேதி பிக் பாஸ் 18 கிராண்டு ஃபினாலே நடந்த நிலையில் ஜூலை மாத இறுதியில் 19வது சீசன் துவங்குகிறதாம். […]
bigboss

You May Like