கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குறிஞ்சி நகரை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக இளம்பெண் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது பழக்கம் நாளடைவில், கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கே வரவழைத்து அந்த இளம்பெண் உடலுறவு வைத்து சந்தோஷமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் அக்கம் பக்கத்தினர் மூலமாக கணவருக்கு தெரியவந்துள்ளது. இதனால், கோபமடைந்த கணவன், தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார் அந்த பெண். வேலைக்கு சென்ற மனைவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால் அதிர்ச்சியடைந்த கணவர், பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெண்ணின் கணவர் தன்னையும், தனது குழந்தைகளையும் தவிக்க விட்டுச் சென்ற மனைவியை மீட்டு கொடுக்கும்படி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளம்பெண்ணையும் அவரது கள்ளக்காதலனையும் வலைவீசி தேடி வருகின்றனர்.