இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாக இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை சட்ட விரோதமாகக் கூறி, அதைத் தடை செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், “அனைத்து மாநிலங்களிலும் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. மக்கள் கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய நெடுஞ்சாலையில் பயணிக்க பணம் வசூலிப்பது ஒரு சட்டவிரோத நடவடிக்கையாகும். எனவே இதனைத் தடை செய்யும் வகையில் உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் “தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதன் நோக்கமே தடையற்ற பயணம் தான். மதுரையில் இருந்து சென்னை வரை பல இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தி வாகங்கள் கடந்து செல்ல அரை மணி நேரம் ஆகிறது என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுங்கச்சாவடிகளில் காத்திருக்காமல் பயணத்தை தொடர வேறு வழியே இல்லையா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI) இயக்குநர் பதில் அளிக்க வேண்டும்
என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Read more: இனி யாரும் நுழைய கூட முடியாது.. சர்வதேச அணுசக்தி நிறுவனத்திற்கு செக் வைத்த ஈரான்..