#TNPSC: தமிழகம் முழுவதும் வரும் 18-ம் தேதி…! தேர்வாணையம் மிக முக்கிய அறிவிப்பு…!

தலைமைச் செயலகப் பணிக்கான எழுத்து தேர்விற்கான ஹால்டிக்கெட் இணையப்பக்கத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி குருப் ’5 ஏ’ வில் அடங்கிய உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (விரித்துரைக்கும் வகை) வருகின்ற 18-ம் தேதி காலை மற்றும் மாலையில் நடைபெறவுள்ளது.


தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்விற்கான ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

45 வயதில் அமைச்சராகிறார் உதயநிதி!!! எந்த துறை தெரியுமா?

Tue Dec 13 , 2022
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதியை அமைச்சராக்க கவர்னர்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை அடுத்து டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி. நாளை காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைமைச்செயலகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்காக தயாராகி வருகிறது தனி அறை, நாளை இரவுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயநிதி […]
udhayanidhistalin2

You May Like