உத்திரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார் இவருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பலேஸ்வர் யாதவ் என்ற வாலிபர் சமீபகாலமாக தொந்தரவு கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த மாணவி வெளியே செல்லும்போதெல்லாம் அவரை விந்துடர்ந்து சென்று அந்த இளைஞர் தொந்தரவு கொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் இந்த செயல் அந்த மாணவிக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இளைஞரின் செயலுக்கு எதிராக அவர் குரல் எழுப்பி கண்டிக்கவும் செய்திருக்கிறார். அப்போதெல்லாம் உன்னை சும்மா விடமாட்டேன் என்று இளைஞர் மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் தான் அந்த மாணவி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11ம் வகுப்பு சேர்ந்துள்ளார். ஆகவே இவர் நாள்தோறும் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் அந்த இளைஞர் பின் தொடர்ந்து வந்து அந்த மாணவியை துன்புறுத்தி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுநீர் நேற்று முன்தினம் வீடு திரும்பியவுடன் அவருடைய அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். வெகு நேரம் ஆன பின்புறம் மகள் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போதுதான் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே பரிசோதித்து பார்த்த மறுத்தவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், அந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் பலேஷ்வர் யாதவை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்