’படத்தை எடுத்தோமா, சம்பாரிச்சமான்னு இருக்கணும்’..!! வெற்றிமாறனை சீண்டிய கஞ்சா கருப்பு..?

ராஜ ராஜ சோழன் இந்துவா? முஸ்லிமா? எதற்கு இதெல்லாம், படத்தை எடுத்தோமா, சம்பாரிச்சோமா என்று இருக்கணும் என நடிகர் கஞ்சா கருப்பு பேசியுள்ளார்.


’ஓங்காரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் மோகன் ஜி, நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, ”ஒரு நாள் தயாரிப்பாளராக இருந்து பாருங்கள், அப்போது தெரியும் அதன் கஷ்டம். நான் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து தோல்வியடைந்த போது, எனது அம்மாவிடம் தெரிவித்தேன். அவர் சொன்னார், நீ காசு கொடுத்து படிக்காத படிப்பை, சினிமாவில் நீ காசை கொடுத்து படித்துள்ளாய் என்றார்.

’படத்தை எடுத்தோமா, சம்பாரிச்சமான்னு இருக்கணும்’..!! வெற்றிமாறனை சீண்டிய கஞ்சா கருப்பு..?

இன்று பிரச்சனை செய்கிறார்கள் ராஜராஜ சோழன் இந்துவா? முஸ்லிமா? என்று. எதற்கு இதெல்லாம், படத்தை எடுத்தோமா, சம்பாரிச்சோமா என்று இருக்கணும். அதெல்லாம் தேவை இல்லாத விஷயம் என்று கஞ்சா கருப்பு குறிப்பிட்டார். இதை இயக்குனர் வெற்றிமாறனை மறைமுகமாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

’படத்தை எடுத்தோமா, சம்பாரிச்சமான்னு இருக்கணும்’..!! வெற்றிமாறனை சீண்டிய கஞ்சா கருப்பு..?

வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தும் இயக்குநர் நடிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். நம்ம ஊரில் இருக்கும் ஊர்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? அவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் கட்டினால் நம்ம பிள்ளைகளுக்கு இலவசமாக விடுவார்களா? அதனால் அயல்நாட்டில் பணத்தைப் போடாதீர்கள்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், படத்தில் நடித்த நடிகை இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு 1 லட்சம் ரூபாய் பணம் கேட்டதற்கு ஆபாசமாகத் திட்டி கடிந்துகொண்டார்.

CHELLA

Next Post

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? ...

Sat Oct 8 , 2022
தமிழக அரசுமருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால்மக்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி சார்பில் போதையில்லா தமிழ்நாட்டை உருகூாக்கும் வகையில் மாரத்தான் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ’ தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் , மக்கள் தைரியமாக புகார் அளிக்க […]
மா.சுப்பிரமணியம்

You May Like