“TVK… TVK…” டீ விற்கவா கும்பலா கிளம்பி வந்துருக்கீங்க..? – தவெக தொண்டர்களை பங்கமாய் கலாய்த்த சீமான்..!!

seeman34455 1559882512

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் செஞ்சிக் கோட்டையை உலகப் பாரம்பர்யச் சின்னமாக அங்கீகரித்திருக்கும் `யுனெஸ்கோ’, அது மராட்டிய மன்னரான சிவாஜியின் கோட்டை எனக் குறிப்பிட்டது. இதற்கு ஆராய்ச்சியாளர்களும் தமிழார்வலர்களும் அது தமிழ் மன்னரின் கோட்டை என்று அறிவிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


அந்த வகையில் நேற்று செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கோனேரி கொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றி கழக தொண்டர்களை கடுமையாக கிண்டல் செய்தார். “உங்கள் கொள்கை என்ன?” என்று கேட்டால், “தளபதி… தளபதி…” என்று கத்துவதாகவும், அது தனக்கு “தலைவிதி… தலைவிதி…” என்று கேட்பதாகவும் சீமான் கிண்டல் அடித்தார்.

மேலும், “சரி எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “TVK… TVK…” என்று கூச்சலிடுவதாகவும், “டீ விற்கவா இவ்வளவு பேர் கூட்டமாக வந்திருக்கிறீர்கள்?” என்று கிண்டல் செய்தார். இதனால் அரங்கம் முழுவதும் சிரிப்பலை ஏற்பட்டது . அதைத்தொடர்ந்து பேசிய சீமான், “புலி வேட்டைக்கு செல்லும்போது வழியில் அணில்கள் ஓடிக் கொண்டிருக்கும்… பத்திரமாக மரத்தில் ஏறிக் கொள்ளுங்கள்… குறுக்கே வராதீர்கள். அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன பெருமை?” என்று விமர்சனம் செய்தார்.

ஏற்கனவே சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களை “அணில்” என்று அழைத்து கிண்டல் செய்யும் நிலை காணப்பட்ட நிலையில், சீமான் நேரடியாக பொதுக்கூட்ட மேடையில் இதையே கூறியது தவெக தொண்டர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தவெகவினர், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Read more: பெற்றோர்களே எச்சரிக்கை..! செல்போன்கள், கேஜெட்டுகள் குழந்தைகளுக்கு இதய நோயை ஏற்படுத்துகின்றன… அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு!

English Summary

Have you come in a crowd to sell tea? – Seeman criticized the Thaveka volunteers.. Insulting speech!

Next Post

ரியல் லைஃப் ஹீரோ..! காருக்குள் சிக்கிய குழந்தையை சாதூர்யமாக மீட்ட நபர்..! குவியும் பாராட்டு..! வைரல் வீடியோ..

Mon Aug 18 , 2025
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத்தில் உள்ள ஒரு இனிப்புக் கடைக்கு ஒரு குடும்பத்தினர் சென்றனர்.. அவர்கள், தங்கள் காரை ஒரு இனிப்புக் கடைக்கு வெளியே நிறுத்தியபோது, சாவி உள்ளே இருந்ததால் தவறுதலாக கதவுகளை மூடினர். ஆனால் அவர்களின் குழந்தை தவறுதலாக காரில் பூட்டப்பட்டது.. இதனால் குழந்தை காருக்குள் சிக்கிக் கொண்டதால், வெளியே வர முடியவில்லை. ஆனால் ஒரு புத்திசாலித்தனமான ஒரு நபர், மொபைல் போன் வீடியோவைப் பயன்படுத்தி குழந்தையை […]
Viral video

You May Like