ஆதார் அட்டையை பான் அட்டையுடன் நீங்கள் இன்னும் இணைக்கவில்லையா இன்னும் ஒரு மாத்திற்குள் செய்தால் குறைவான அபராதம்தான். இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆதார் எண்ணுடன் பான் என்னை இணைப்பதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை பலமுறை நீட்டித்துள்ளது. உங்களிடம் பான்கார்டு இருந்தால், இன்னும் ஆதார்கார்டுடன் இணைக்கவில்லை என்றால்அதற்ான அபராதத்தை செலுத்த வேண்டும் மார்ச் 2023 தொடங்கும் முன்பு ஆதார் கார்டுடன் இணைக்கத் தவறினால், மார்ச் 2023க்குப் பின்னர் நிரந்தர கணக்கு எண் (பான்) செயல்படாது என மத்திய அரசு நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ள.
மார்ச் 31, 2022 வரை ஆதாருடன் இணைக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. இணைக்கவில்லை என்றால், ரூ.1000 அபராதம் விதிக்கப்படலாம். ஒருவேளை அப்போதும் நீங்கள் இணைக்கவில்லை என்றால், மார்ச் மாதம் 2023க்கு பின்னர் உங்கள் பான் கணக்கு செயல்படாது. பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 வரை பான் கார்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கால அவகாசம் வரை பான் அட்டைகள் செல்லும்.
பல முறை ஆதார் அட்டையுடன் பான் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை பல முறை நீட்டித்துள்ளது. முக்கிய ஆவணங்களை இணைப்பதற்கான தற்போது அளிக்கப்பட்டுள்ள கடைசி தேதி மார்ச் 31, 2022 ஆகும்.
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் உள் சென்று விரைவு இணைப்பு பகுதிக்கு சென்று ஆதார் எண்ணை இணைப்பை கிளிக் செய்தால் புதிய சாளரம் தோன்றும். ஆதார் விவரங்கள், பான், செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும். அதை நிரப்பி சரிபார் என்பதை கிளிக் செய்ய வேண்டும். புதிதாக இந்த முறையை பின்பற்றினால் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் பான்-ஆதார் இணையாது.