தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கடந்தாண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி திடீரென திருப்பதியில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அதுமட்டுமின்றி இவர்களது திருமண புகைப்படங்கள் அதிகளவில் ட்ரோலும் செய்யப்பட்டன. குறிப்பாக மகாலட்சுமி பணத்திற்கு ஆசைப்பட்டு தான் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது.

ரவீந்தர் – மகாலட்சுமி இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். ட்ரோல்களையெல்லாம் பார்த்து துவண்டுவிடாத இந்த ஜோடி, அடுத்தடுத்து யூடியூப்பில் ஜோடியாக பல்வேறு பேட்டிகளை கொடுத்து அதற்கான பதிலடியும் கொடுத்தது. திருமணத்துக்கு பின்னர் ரவீந்தர்- மகாலட்சுமி ஜோடி சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

முன்னதாக, அனில் என்பவருடன் திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டு இருவரும் மறுமணம் செய்துகொண்டார்கள். மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருடன் மறுமணம் செய்தபோது ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், நேற்று ஜூன் 18, தந்தையர் தினம். எனவே பிரபலங்கள் அனைவரும் தங்களது தந்தை புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் சீரியல் நடிகை மகாலட்சுமி தனது முதல் மகனின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டும் பிரபலங்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.