நண்பன் சிறைக்கு சென்ற சமயத்தில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு..!! திரும்பி வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி..!! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!

Sex 2025 1

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பெரியகள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசிபி ஓட்டுநர் நல்லசாமி (38), இவரது நண்பன் சந்திரன் (35). இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு, சந்திரன் தனது தாத்தா, பாட்டியை சொத்து தகராறு காரணமாக கொலை செய்தார். இந்த கொலைக்கு அவரது நண்பரான நல்லசாமியும் உதவியுள்ளார்.


இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த சந்திரன், தனது நண்பன் நல்லசாமியின் மனைவி சிந்தாமணியுடன் (32) கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். மேலும், கணவன் – மனைவி போல் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதற்கிடையே, நல்லசாமி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்து தனது குடும்பத்தினரை சந்தித்தபோது, சந்திரன் தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாகவும், அவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், மனைவியின் மீது சந்தேகம் கொண்ட நல்லசாமி, 2 நாட்களாக அவர்களை கண்காணித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு நல்லசாமியின் வீட்டிற்கு வந்த சந்திரன், நல்லசாமியுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்திரன் வீட்டிற்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்துள்ளார். நல்லசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டிற்கு வெளியே படுத்துத் தூங்கியுள்ளார்.

அதிகாலை 3.30 மணியளவில், விழித்த நல்லசாமி, வெளியே இருந்த கல்லை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று சந்திரனின் தலையில் போட்டுள்ளார். இதில் சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சந்திரனை கொலை செய்த நல்லசாமியை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் உல்லாசம்..!! கணவன் கிளம்பியதும் வீட்டிற்கு வந்து..!! நேரில் பார்த்த தந்தை..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!

CHELLA

Next Post

சஷி யோகம்.. இந்த 5 ராசிக்காரர்களுக்கும் பெரும் ஜாக்பாட்! இனி தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்!

Sat Sep 13 , 2025
ஜோதிடத்தின்படி, கிரகப் பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்தில் இணைந்ததால் ‘சஷி யோகம்’ உருவாகும். இந்த யோகத்துடன், ‘பரிவர்த்தன யோகம்’, ‘ரவி யோகம்’ மற்றும் ‘சுனப யோகம்’ போன்ற பல நல்ல யோகங்களும் உருவாகின்றன, இவை 5 குறிப்பிட்ட ராசிகளுக்கு பெரும் நிதி மற்றும் தனிப்பட்ட நன்மைகளைத் தரும் என்று கூறப்படுகிறது. ரிஷபம் இந்த நல்ல யோகங்கள் ரிஷப […]
rare yogam horos

You May Like