ஒரே நேரத்தில் 2 கள்ளக்காதலன்களுடன் உல்லாசம்..!! மது ஊற்றிக் கொடுத்து பீர் பாட்டிலால் தலையில் ஓங்கிப் போட்ட கொடூரம்..!! துடிதுடித்து பலி..!!

Fake Love 2025 1

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் வேடபலம் மண்டலத்தின் ராமண்ணாபேட்டை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்போது ஒரு மாதத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரமிளா என்ற தீபிகா. இவருக்கு வயது 24.


கடந்த ஒரு மாதமாக இவரை காணாததால், அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இதுதொடர்பான விசாரணையில், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தீபிகாவுக்கு திருமணம் ஆன நிலையில், கணவர் இறந்துவிட்டார். இதனால், தீபிகா மதுவுக்கு அடிமையாகியுள்ளார்.

மேலும், நிஜாம்பட்டணத்தை சேர்ந்த ஈகா வெங்கடேஸ்வர ராவ் என்பவருடன் தீபிகாவுக்கு கள்ளத்தொடர்பும் இருந்துள்ளது. அதேபோல், ஈகா வெங்கடேஸ்வர ராவின் மைத்துனர் நாகபாபுவுடனும் தீபிகா கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் தீபிகா, நாகபாபுவை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேஸ்வர ராவும், நாகபாபுவும் சேர்ந்து தீபிகாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர்.

அதன்படி, தீபிகாவை இருவரும் சேர்ந்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மது ஊற்றிக் கொடுத்து பீர் பாட்டிலால் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில், தீபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், அவரது உடலை அங்கேயே புதைத்துவிட்டு வந்துள்ளனர். தீபிகா காணாமல் போனதை உறவினர்கள் புகாரளித்திருந்தனர். இதையடுத்து, போலீசார் விசாரணையில் ஈகா வெங்கடேஸ்வர ராவும், நாகபாபுவும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர், அவர்கள் காண்பித்த இடத்தில் இருந்து தீபிகாவின் உடலை போலீசார் மீட்டனர். இதனைத் தொடர்ந்து, கள்ளக்காதலன்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read More : பாமகவில் இருந்து முக்கிய புள்ளியை நீக்கிய ராமதாஸ்..!! அதிர்ச்சியில் நிர்வாகிகள்..!! பின்னணி என்ன..?

CHELLA

Next Post

1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது ஹைதராபாத் நிஜாம் 5000 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினாரா? உண்மை என்ன?

Tue Jun 10 , 2025
உலகின் மிகப் பெரிய பணக்காரராம மிர் உஸ்மான் அலி கான், 1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய அரசாங்கத்திற்கு 5,000 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினாரா? உண்மை என்ன? அரச குடும்பங்கள் பற்றிய ​​பல கட்டுக்கதைகள் மற்றும் கூற்றுகள் கதைகளாக எப்போதுமே வலம் வருகின்றன.. இருப்பினும், அவற்றில் எந்தளவு உண்மை உள்ளது என்பது தான் இந்தக் கூற்றை மதிப்புமிக்கதாக ஆக்குகிறது. ஹைதராபாத்தின் கடைசி நிஜாமும், ஒரு காலத்தில் உலகின் மிகப் […]
151812893 1

You May Like