சப்-இன்ஸ்பெக்டருடன் உல்லாசம்..!! அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டும் கள்ளக்காதலி..!! மனைவி கொடுத்த பரபரப்பு புகார்..!!

Sex 2025 7

தூத்துக்குடியை சேர்ந்த 35 வயதுள்ள போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் அந்தரங்க தகவல்களை வைத்து, பணம் கேட்டு அவரது குடும்பத்துக்கு பெண் காவலர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி அளித்த புகாரில், “எனது கணவர் பணிபுரியும் போக்குவரத்து போலீஸ் பிரிவுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் கயத்தாறில் இருந்து ஒரு பெண் போலீஸ் மாற்றுப் பணியாக வந்தார். திருமணமாகி குழந்தைகள் உள்ள அந்தப் பெண் காவலர், ஒரு நிருபருடன் சேர்ந்து என் கணவரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, என் கணவருடன் நெருங்கிப் பழகிய அந்தப் பெண் காவலர், அவர்களது அந்தரங்க உரையாடல்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை செல்போனில் சேமித்து வைத்து, பணம் கேட்டு மிரட்டினார். இந்த காரணங்களால் என் கணவரும், அந்தப் பெண் காவலரும் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த செப்.6ஆம் தேதி, அந்தப் பெண் காவலர் என் கணவர் சம்பந்தப்பட்ட சில ஆடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பின்னர், செப்.17ஆம் தேதி சமாதானப் பேச்சுவார்த்தைக்காக என்னையும், என் உறவினர்களையும் வரவழைத்தார். அப்போது, தன்னிடம் என் கணவர் தொடர்பான 40-க்கும் மேற்பட்ட ஆடியோக்களும், 20-க்கும் மேற்பட்ட வீடியோக்களும் இருப்பதாகவும், அவற்றைப் பொதுவெளியில் வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் அவர் மிரட்டினார்” என்று அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

எனவே, அந்தப் பெண் காவலர், நிருபர் உள்ளிட்ட 12 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், கோவில்பட்டி போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெண் காவலர் மற்றும் நிருபர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : துணி துவைத்த 10 வயது சிறுமியை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்..!! மத வழிபாட்டு தலத்தில் வைத்து கூட்டு பலாத்காரம்..!!

CHELLA

Next Post

8ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர்..!! மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Mon Nov 3 , 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் சாலமன் பிரபாகரன். இந்தப் பள்ளியில் 8ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவியை சோதித்த மருத்துவர்கள், 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மயிலாடுதுறை […]
Rape 2025 5

You May Like