அதிரடி காட்டிய ஹேலி மேத்யூஸ்..!! அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்..!!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.


மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய
ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பவர்பிளே ஓவர்களிலேயே பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்களை இழக்க தொடங்கினர். அதன்படி, 18.4 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு அணி.

சிறப்பாக பந்துவீசிய ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 156 ரன்கள் என்ற
இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஹேலி மேத்யூஸின் 77 ரன்கள்
மற்றும் நேட் சைவர் – இன் 55 ரன்கள் உதவியுடன் 14.2 ஓவர்களிலேயே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடி 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழி வகுத்த ஹேலி மேத்யூஸ் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் தொடர்கிறது மும்பை இந்தியன்ஸ்
அணி.

CHELLA

Next Post

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! சுங்கக் கட்டணம் அதிரடி உயர்வு..!! வெளியான பரபரப்பு அறிவிப்பு..!!

Tue Mar 7 , 2023
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 566 சுங்கச் சாவடிகளில், தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகள் அமைந்துள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை இதற்கான கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் போன்ற வாகனங்களுக்கு 5 சதவீதமும், லாரிகளுக்கு 10 […]
202203300946377278 TollPlaza Fee rises from April 1 SECVPF

You May Like