மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய
ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பவர்பிளே ஓவர்களிலேயே பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்களை இழக்க தொடங்கினர். அதன்படி, 18.4 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு அணி.
சிறப்பாக பந்துவீசிய ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 156 ரன்கள் என்ற
இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஹேலி மேத்யூஸின் 77 ரன்கள்
மற்றும் நேட் சைவர் – இன் 55 ரன்கள் உதவியுடன் 14.2 ஓவர்களிலேயே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடி 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழி வகுத்த ஹேலி மேத்யூஸ் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் தொடர்கிறது மும்பை இந்தியன்ஸ்
அணி.