மகளிர் உட்பட நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கு குறைந்த செலவில் தரமான, தகுந்த, சுகாதார சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய சுகாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் நகர்ப்புற சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துவதே இந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும். குறிப்பாக, மகப்பேறு, தொற்று மற்றும் தொற்றல்ல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

மக்களுக்கு சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டியது மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலையாயக் கடமை. இதனை கருத்தில் கொண்டு, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஒன்றரை லட்சம் உதவி சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற முதன்மை மையங்கள் ஆகியவை ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் மூலம் மகப்பேறு, குழந்தை சுகாதார சேவைகள், தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் ஆகியவற்றுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதில் தொற்றா நோய்கள், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பொதுவாக பரவும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 3 நோய்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.