நமது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் முடி நரைப்பதற்குப் பெரிதும் காரணமாகின்றன. இதைத் தவிர, தூசி, சூரிய ஒளி மற்றும் மாசுபாட்டின் காரணமாக முடி மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்…
நரை முடியை கருமையாக்க பலர் ரசாயணம் சார்ந்த ஹேர் டையை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, நன்மைக்கு பதிலாக தீங்கு ஏற்படுகிறது, ஏனெனில் இத்தகைய நடவடிக்கைகள் முடியை சேதப்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இயற்கை முறைகளைப் பயன்படுத்துவது நல்லது. இயற்கையாகவே முடியை கருமையாக்க பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் சில,

காஃபி பேஸ்ட் மற்றும் மருதாணி : காபியில் காஃபின் என்ற பொருள் நிறைந்துள்ளதால் ஒரு வலுவான ஆக்ஸிஜனேற்றியாகும், இது முடியை பளபளப்பாகவும் கருமை நிறமாகவும் மாற்றுகிறது. மருதாணி ஒரு இயற்கையான வண்ணம் மற்றும் கண்டிஷனராக செயல்படக்கூடியது, இந்த இரண்டு விஷயங்களின் கலவை இயற்கை ஹேர்டையாக பயன்படுத்தி வெள்ளை முடியை கருமையாக மாற்றலாம்.
ஹேர்டை கலவையை எவ்வாறு செய்வது?: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் காபியை பவுடரை கலக்கவும். இப்போது அதை ஆறவைத்து தண்ணீரில் மருதாணி தூள் அல்லது அரைத்த மருதாணி பேஸ்டை கலக்கவும். இப்போது சுமார் ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள். இப்போது அதில் சிறிது தேங்காய் எண்ணெயைச் சேர்த்து, லேசான கைகளால் தலைமுடியில் தடவவும். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு உங்கள் தலை குளிர்ந்த நீரால் கழுவவும். இதைச் செய்வதன் மூலம் நல்ல பலனை உணர்வீர்கள்.