fbpx

கரு , கரு நீளமான கூந்தல் .. இந்த ஒரு பொருள் போதும் …!!

அடர்த்தியான தலைமுடியுடன், கருகருவென தலைமுடி இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. நவீன வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு கலாச்சாரத்தால் தலைமுடி மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உங்கள் கூந்தலை அழகாக மாற்றியமைக்க நீங்கள் கறிவேப்பிலையை பயன்படுத்தலாம்.

இது அடர்த்தியான கூந்தலையும் கருமை நிறத்தையும் கொடுக்கும். அதை இந்த பதிப்பில் பார்க்கலாம். இன்று உணவுகளில் அதிகமாக இராசயனங்கள் அதிகரித்து வருகிறது. இது உடல் நலத்தை மட்டுமல்லாமல் தலைமுடியையும் கூட பாதிக்கிறது. அதனால் தான் கூந்தல் உதிர்வை அதிகம் எதிர்கொள்கிறோம்.

மேலும் கூந்தல் வளர்ச்சியும் வேகமாக இருக்காது. கூந்தலை பராமரிக்க இயற்கை வழிகளில் முயற்சிப்பது சிறந்த பலனை தரும். அந்த வகையில் கூந்தலுக்கு நன்மை செய்ய கறிவேப்பிலையை முதலாவதாக தேர்வு செய்வது சிறந்த பலனை தரும்.

கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்சிடன்ட்கள், புரதம் அதிகம் உள்ளது. இது கூந்தலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது.

இது முடி உதிர்வை எதிர்த்து போராடுவது முதல் பொடுகு மற்றும் அரிப்பு உச்சந்தலையில் இருந்து விடுபடுவது வரை உதவும். . தலை அரிப்பையும் போக்கும். மேலும் இது கூந்தல் முன் கூட்டியே நரைப்பதை தடுக்க செய்யும். இதில் வைட்டமின் பி அதிக அளவில் உள்ளது. இதை எப்படி கூந்தலுக்கு பயன்படுத்துவது தெரிந்துகொள்வோம்.

கறிவேப்பிலையுடன், நெல்லிக்காய், வெந்தயம் சேர்த்து கலந்து பயன்படுத்துவது கூந்தலை நீளமாக வைத்திருக்க உதவுகிறது. அரை கப் கறிவேப்பிலை இலை உடன் சம அளவு வெந்தய இலைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனுடன் ஒரு நெல்லிக்காயை எடுத்து கொட்டையை எடுத்து விட்டு சதைப் பகுதியை மட்டும் எடுத்து மூன்றையும் சேர்த்து அரையுங்கள். மையாக வரும் வரை அரைத்து எடுத்து அதை தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் காய வைத்து விட்டு 20 முதல் 30 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரில் தலை குளிக்க வேண்டும். இது கூந்தலை நீளமாக வைத்திருக்க உதவுகிறது.

வாணலியை சூடாக்கி அதில் தேங்காயெண்ணெய் ஊற்றவும். அதனுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்க்கவும். அவை எண்ணெயில் பொரிக்கும் போது அடுப்பை அணைக்கவும். பிறகு ஆறவைத்து அதை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.

இதை வாரம் ஒரு முறை கூந்தலில் தடவி வந்தால் கூந்தலுக்கு சிறந்த நன்மை அளிக்கும். மேலும் இதில் கொழுப்பு அமிலங்களும் வைட்டமின்களும் இருப்பதால் கறிவேப்பிலை எண்ணெய் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும். இன்று 10 ல் ஏழு பெண்கள் முடி உதிர்வை எதிர்கொள்கின்றனர். இந்த வைத்தியம் வீட்டிலேயே முடி உதிர்வதை தடுக்கும். கறிவேப்பிலையுடன் வெங்காயம் சேர்த்து பயன்படுத்தும் போது வெங்காயச்சாற்றில் நல்ல அளவு கந்தக சத்து உள்ளது. இது முடியின் மேற்புறத்தை வலுவாக்கும். கறிவேப்பிலை கூந்தலுக்கு மென்மையை அளிக்கும். கூந்தலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தை கொடுக்கும்.

தலைமுடி பளபளப்பாக இருக்க தயிர் கை கொடுக்கும். தலைமுடிக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கும். தலையில் உள்ள இறந்த தலைமுடி செல்களை அகற்றவும் தயிர் உதவும். இது பொடுகையும் தடுக்க செய்யும்.

கொஞ்சம் தயிரை எடுத்து அதில் கறிவேப்பிலை கலந்து மிக்ஸியில் அடிக்கவும். இரண்டையும் கலந்து மிக்ஸியில் அடித்து எடுத்து தலைமுடி முழுவதும் உச்சந்தலை பகுதியில் இருந்து வேர் வரை தடவவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். கூந்தல் பளபளவென்று இருக்கும்.

Next Post

அதிரடி...! இனி இதற்கும் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்...! அமலுக்கு வந்த புதிய விதிகள்...!

Thu Oct 20 , 2022
இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்படும். சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். இனி இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களில் வாகன ஓட்டுநர் […]

You May Like