fbpx

ஒரு சொட்டு போதும்.! மருக்கள் ஒரே வாரத்தில் உதிர இந்த இரண்டு பொருள் மட்டும் பயன்படுத்தி பாருங்க.!?

பொதுவாக நம் உடல் கழுத்து, கை, கால் பகுதியில் அனைவருக்கும் தெரியும் விதத்தில் மருக்கள் இருந்தால் அது நம்மை தன்னம்பிக்கையை இழக்க செய்கிறது. இது அழகுரீதியாகவும், உடல் ரீதியாகவும் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு மருந்துகள் பல இருந்தாலும் எதுவும் நிரந்தர தீர்வை தருவதில்லை.

மேலும் இந்த மருக்கள் ஒருவித பாக்டீரியா தொற்றுகளால் உடலில் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டாலும், உடல் சுத்தம் இல்லாமல் இருந்தாலும் இந்த மருக்கள் உருவாகும். எனவே இப்படிப்பட்ட அழகையும், உடல் நலத்தையும் கெடுக்கும் மருக்களை ஒரே வாரத்தில் எளிதில் வீட்டு வைத்திய முறைப்படி குணப்படுத்தலாம். இதைக் குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

தேவையான பொருட்கள் : வெற்றிலை, சுண்ணாம்பு

இந்த இரண்டு பொருட்களின் மூலமாகவே மருக்களை எளிதில் சரி செய்யலாம். முதலில் வெற்றிலையை, காம்பை மட்டும் கிள்ளி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த வெற்றிலை காம்பை நன்றாக அரைத்து சுண்ணாம்பு சிறிதாக கலந்து அதனை மரு உள்ள இடத்தில் தினமும் தேய்த்து வந்தால், ஒரே வாரத்தில் மருக்கள் தானாகவே உதிர்ந்து விடும்.

இதன் பிறகு உடலில் புதியதாக மருக்கள் உருவானாலும், இதே முறையை பயன்படுத்தலாம். மேலும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் சாறு அடிக்கடி குடித்து வர வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமடைந்தால் மருக்கள் உடலில் உருவாகாது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

English summary: ways to cure warts

Read more : சித்த மருத்துவம் : கடுமையான மூட்டு வலியை விரட்டும் மேஜிக் மில்க்.! எப்படி செய்யலாம்.!?

Rupa

Next Post

முருகனை வழிபட்டு இந்த பரிகாரம் செய்தால் திருமண தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும்.!?

Thu Feb 29 , 2024
பொதுவாக நம் முன்னோர்கள் காலத்தில் திருமணம் இன்னும் நடக்கவில்லை என்ற கவலை யாருக்கும் இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் வந்து விட்டாலே ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உடனே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் இந்த நவீன காலத்தில் படிப்பு, வேலை, பொருளாதாரம் என அனைத்திலும் சிறந்ததாக இருந்தாலும் பலருக்கும் திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எதிர்பார்ப்பு என்பது அதிகமாகி விட்டது. […]

You May Like