fbpx

குழந்தைகளுக்கு பிடித்த ரசமலாய்.! 10நிமிடத்தில் ஈசியாக எப்படி செய்யலாம்.!?

பொதுவாக குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே மிகவும் பிடிக்கும். அப்படியிருக்க பாலாடையை வைத்து செய்யப்படும் ரசமலாயை பிரெட் துண்டுகளை வைத்து இன்ஸ்டென்டாக எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் இதை செய்து கொடுத்து அசத்துங்க.

தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள்- 5, பால்- 1 லி, முந்திரி- 20, சர்க்கரை- 6 டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ- 5, ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன், நெய்- 2 ஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பால் சுண்டி வரும் போது பத்து முந்திரிப்பருப்பை எடுத்து பொடி செய்து பாலில் சேர்க்க வேண்டும். மீதி முந்திரி பருப்பை நறுக்கி துண்டுகளாக பாலில் சேர்க்கவும். பின்பு சர்க்கரை, ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும்.

பின்பு பிரட் துண்டுகளை எடுத்து ரசமலாய் வடிவத்திற்கு வட்டமாக வெட்டி நெய்யில் பொரித்து எடுக்க வேண்டும். பின்னர் கொதிக்க வைத்து இறக்கிய வைத்த பாலில் இந்த பிரட் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு பின்பு எடுத்து பரிமாறினால் குழந்தைகளுக்கு பிடித்த இன்ஸ்டன்ட் ரசமலாய் தயார்.

Rupa

Next Post

’இனி வங்கிகளில் கடன் வாங்கும்போது இதை மறந்துறாதீங்க’..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி..!!

Sat Feb 10 , 2024
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும்போது நிறைய மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதுபோன்ற கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பது பொதுவாகவே வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், மறைமுக கட்டணங்கள் அனைத்தையும் முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும்போது, கடன் தொகைக்கு வட்டி விகிதம் விதிக்கப்படும். இந்த வட்டியுடன் பிராசஸிங் கட்டணம், ஆவணக் கட்டணம் என பல்வேறு மறைமுகக் […]

You May Like