fbpx

கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர்களை கவனமாக பயன்படுத்துங்கள்… எச்சரிக்கும் ஆய்வு …

கொரோனா பெருந்தொற்று உலக மக்கள் அனைவரையும் பெரிய அளவில் ஆட்டிப் படைத்தது.. அதுமட்டுமின்றி நம் அன்றாட வாழ்க்கையை புரட்டிப்போட்டது. இதனிடையே சானிடைசர்கள் பயன்படுத்துவதை நாம் பழக்கமாக்கிக் கொண்டோம். இதைப் பயன்படுத்தும்போது நாம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிறது சில ஆய்வு முடிவுகள்.

கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்பதற்காக மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். அதோடு மூகக் கவசம் அணிதல், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசா்கள் போன்றவற்றை தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா்.

கோவிட்-19 வைரஸின் காரணமாக மேற்சொன்ன எச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டாலும், அவை நமது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சியை அளித்துள்ளது.. குறிப்பாக கோவிட்-19 பரவாமல் தடுப்பதற்காக, கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் சானிடைசா்கள் நமது குழந்தைகளின் கண்களைப் பாதிக்கின்றன.

கடந்த ஜனவரியில் அன்று ஜமா ஆஃப்தமாலஜி என்ற பத்திரிக்கையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டிருந்தது. இந்த கொரோனா காலத்தில், ஆல்கஹால் கலந்த சானிடைசா்களை அதிகம் பயன்படுத்துவதால் நமது குழந்தைகளின் கண்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றது.

கண் பிரச்சனைகள் கடந்த ஆண்டை விட அதிகம் மேலும் 2019 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தீங்கிழைக்கக்கூடிய வேதிப் பொருட்கள் மூலம் அதிக அளவிலான கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக பிரான்ஸ் விஷ கட்டுப்பாட்டு மையம் கொடுத்த அறிக்கை விளக்கியுள்ளது.

 2019 ஆம் ஆண்டு வேதிப் பொருள்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கண் பிரச்சினைகளில் 1.3 விழுக்காடு சானிடைசா்கள் மூலம் ஏற்பட்டன. அதே நேரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு இதே விழுக்காடு 9.9 ஆக அதிகாித்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் ஒரே ஒரு தவழும் குழந்தைக்குத் தான் சானிடைசா் மூலம் கண்ணில் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் 2020 ஆண்டு 16 தவழும் குழந்தைகளுக்கு சானிடைசா் மூலம் கண்களில் பிரச்சினைகள் ஏற்பட்டதாக அந்த மையம் கூறுகின்றது.

பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சானிடைசா்கள் முக்கியமானவை என்றாலும் அவை குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன என்பது உண்மை. சானிடைசா்கள் பயன்படுத்துவைத் தொடர வேண்டும். அப்போது தான் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் அது குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்

குழந்தைகளின் கண்களை பாதுகாக்கும் வழிகள் – நமது குழந்தைகள் மிகவும் சிறியவா்களாக இருந்தால், நாமே அவா்களுக்கு சானிடைசா்களைக் கொடுத்து நமது முன்பாகவே அவா்களுடைய கைகளை சுத்தம் செய்ய வைக்க வேண்டும். – பொது இடங்களில் உள்ள இயந்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் சானிடைசா்களை நமது மேற்பார்வையில் மட்டுமே நமது குழந்தைகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

– சானிடைசா்களை வைத்து நமது குழந்தைகள் கைகளை சுத்தம் செய்த பிறகு மீண்டும் நீரால் கைகளை சுத்தம் செய்ய வைக்க வேண்டும். – நமது குழந்தைகளுக்கு பார்வை கோளாறுகள் இருந்தால், அவா்களை மூக்குக் கண்ணாடி அணியச் செய்ய வேண்டும். இதன் மூலம் அவா்களுடைய கண்களை சானிடைசா்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.

Next Post

இந்த கிழங்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி மாரடைப்பை தடுக்கின்றது!

Fri Sep 30 , 2022
டாரோ ரூட் எனப்படும் சேப்பங்கிழங்கு பல்வேறு உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு வகை காய்கறி ஆகும். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி மாரடைப்பை தடுக்க உதவும் ஆரோக்கியமான கிழங்கு வகையைச் சார்ந்தது. சில காய்கறிகளை சிலருக்குப் பிடிக்காது. இந்த கிழங்கில் பெரும்பாலும் வறுத்தோ அல்லது புளிக்குழம்போ வைத்து சாப்பிடுவார்கள். சிலருக்கு இந்த கிழங்கின் வழவழப்பான தன்மை பிடிக்காது. இதனால் இந்தக் கிழங்கு வெறுப்பை சம்பாதிக்கின்றது. இருந்தாலும் இதில் எவ்வளவு […]

You May Like