ஆப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் இதய துடிப்பு போன்று ஆழமான அதிர்வுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் அது கண்டத்தையே துண்டாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவின் அஃபார் பகுதிக்கு அடியில், ஆழமான பகுதியில், இதயத் துடிப்பு போன்ற உருகிய பாறை துடிப்புகளின் அதிர்வுகள் எழுவது புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாகவும், மில்லியன் கணக்கான ஆண்டுகளில், இந்த செயல்முறை ஒரு புதிய பெருங்கடலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியை மையமாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும், இந்த பகுதி மூன்று டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் ஒரு தனித்துவமான மண்டலமாகவும் உள்ளது. இந்த பகுதி ஒரு வெப்பமான மேன்டலின் ஒரு அடுக்கின் மேல் அமைத்திருப்பதையும், அது இதயத்தின் துடிப்பைப் போல மேலே ஏறியும், கீழே இறக்கியும் வருவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த மேல்நோக்கிச் செல்லும் மேன்டல் நிலையானது அல்ல, ஆனால் அது மேலே துடிப்பாக எழுப்பப்படுகிறது, இது விஞ்ஞானிகளுக்கு பூமியின் ஆழமான ஆழமான உட்புறம் மற்றும் மேற்பரப்பு அம்சங்களுக்கு இடையிலான உறவை புரிந்துகொள்ள உதவும். மேலும் இந்த துடிப்புகள் தனித்துவமான வேதிப்பொருட்களை கொண்டுள்ளன. பகுதியளவு உருகிய மேன்டலின் இந்த ஏறுவரிசை துடிப்புகள் மேலே உள்ள பிளவு தட்டுகளால் வழிநடத்தப்படுகின்றன. பூமியின் உட்புறத்திற்கும் அதன் மேற்பரப்பிற்கும் இடையிலான தொடர்பு பற்றி நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதற்கு இது முக்கியம், ”என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் எம்மா வாட்ஸ் கூறினார்.
அஃபார் பகுதியில் மட்டுமே, விஞ்ஞானிகள் மூன்று பெரிய டெக்டோனிக் பிளவுகளின் சந்திப்புப் புள்ளியை நேரடியாகக் கவனிக்க முடியும். பிரதான எத்தியோப்பியன் பிளவு, செங்கடல் பிளவு மற்றும் ஏடன் வளைகுடா. இந்த பிளவு மண்டலங்கள் பூமியின் மேலோடு பிரிந்து செல்லும் பகுதிகள் ஆகும். இது இறுதியில் ஒரு புதிய கடல் உருவாக்குவதற்கான இடத்தை உருவாக்குகிறது. அதேநேரம் இந்தப் பிளவு உடனடியாக ஏற்படாது. இவை மெல்ல மெல்ல ஏற்படும். இதனால் பல மில்லியன் ஆண்டுகளில் பிளவு முழுமையடைந்து கடற்பரப்பு விரிவடையும்.
ஆப்பிரிக்காவில் அஃபாருக்கு அடியில் ஒரு வெப்பமான மேன்டல் இருப்பதாகவும், அது மேல்நோக்கி துடித்து எழுந்து மேலுள்ள பளிங்கு பகுதியை பலவீனப்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக நம்பிவந்தனர். ஆனால் இப்போது வரை, அதன் நடத்தை அல்லது அமைப்பு பற்றி குறைந்த தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: வானில் இருந்து வயலில் விழுந்த மேகம்!. மிரண்டு போன விவசாயிகள்!. திக் திக் வீடியோ!. உண்மை என்ன?